தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உரையாற்றினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் பேசினார். இதில் பொருளாளர் எம்.வெங்கடேசன், மாநிலத் துணைத் தலைவர்கள் ஆர்.குருவேல், எஸ்.ராமச்சந்திரன், மண்டலச் செயலாளர் எஸ்.உமாநாத் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.