தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற ஆட்சி மொழிக் கருத்தரங்கில் , தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சியர் க.வீ.முரளிதரன் பரிசுத்தொகையினை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் க.அன்பழகன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பெ.இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.