சிவகங்கை, ஜன.20- சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓவியக் கலைஞர் கலைமகள் முத்துகிருஷ்ணன். இவர், அணு என்ற பெயரில் அறிவியல் அஞ்சல் அட்டை சிற்றி தழை 24 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் . 600 பிரதி கள் கொண்ட இந்த இதழ் அமெரிக்கா, சிங்கப்பூர் ,மலேசி யா, இலங்கை, அந்தமான், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வருகிறார் .லிம்கா சாதனை விருது பெற்றுள்ளார். 2010 இல் சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் இவரை அழைத்து பாராட்டு விருது வழங்கியிருக்கிறது. 13 முறை ஓவியக் கண்காட்சி நடத்தி யுள்ளார். இந்தியாவிலேயே முதல்முறையாக முப்பரி மாணத்தில் ஓவியங்கள் வரைந்து சிறப்பு பெற்றவர். மதுரை காந்தி மியூசியம் மற்றும் சிவகங்கை அரசு அருங்காட்சியகங்களில் கண்காட்சி நடத்தியுள்ளார். 2004 இல் கின்னஸ் சாதனைக்காக 1330 திருக்குற ளுடன் கூடிய அரை அங்குலமே கொண்ட தினசரி நாட்காட்டி வெளியிட்டார். 2006 இல் கைக்குட்டையில் நாட்காட்டியை உருவாக்கி மக்களுக்கு விநியோகம் செய்தார். 2010 இல் தமிழ் எழுத்துக்களால் கைவிசிறி வடிவ நாட்காட்டியை உருவாக்கினார். 2014 இல் முப்பரி மாண கண்ணாடியுடன் பார்க்கக்கூடிய நாட்காட்டியை உருவாக்கியிருந்தார். 2015 ஆம் ஆண்டு கண்பார்வை யற்றவர்களுக்கான நாள்காட்டி தயாரித்துக்கொடுத்தார். 2023 ஆம் ஆண்டுக்கு, ‘யாதும் ஊரே,யாவரும் கேளிர்’ என்று கூறிய கணியன் பூங்குன்றனார் உருவப்படத்து டன் தமிழ் நாட்காட்டியை தயாரித்து வெளியிட்டுள்ளார்.