தேனி, ஆக.7- பெரியகுளத்தில் காதல் ஜோடி மர்ம மான முறையில் இறந்தது தொடர்பாக விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டச் செயலாளர் இ.தர்மர் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை:- பெரியகுளம் காந்தி நகரைச் சேர்ந்தவர் வேலவர்/ இவரது மகன் மாரிமுத்து. (22) கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் மகள் மகாலட்சுமி (17). இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காந்தி நகர் அருகே கும்பக் கரை அருவி செல்லும் பிரதான சாலை யில் வசித்து வருகிறார்கள். மாரிமுத்து மகா லட்சுமி இருவரும் கடந்த மூன்று ஆண்டுக் கும் மேலாக காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென முயற்சித்துள்ளார்கள். இத னால் மாரிமுத்துவின் மீது போஸ்கோ வழக் கும் பதியப்பட்டுள்ளது. மகாலட்சுமிக்குத் திருமண வயது இன்னும் வராததால் அதில் உறுதியான முடிவு எதுவும் எடுக்க முடி யாத நிலையில் காதலர்கள் இருந்துள்ளார் கள்.
மேலும் இரு தரப்பு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் ஆடி மாதம் 18-ஆம் தேதி மகாலட்சுமி மாரி முத்துவின் வீட்டிற்குச் சென்று தம்மைத் திரு மணம் செய்து கொள் என்று வற்புறுத்தி உள்ளார். இதனால் மாரிமுத்து குடும்பத் தார் காவல் நிலையத்தில் புகார் செய்து காவல் துறையினர் தலையிட்டுப் பெண் வீட்டாருடன் பேசி மகாலட்சுமியை அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பேரும் வீட்டிற்குச் செல்ல வில்லை. இதனால் இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களைத் தேடி வந்தனர். சனிக்கிழமை காலை காந்தி நகர் அருகே உள்ள மாந்தோப்பில் மாரிமுத்து மற்றும் மகாலட்சுமி ஆகிய இருவரும் ஒரே மாமரத்தில் அருகருகே தூக்குப் போட்டு இறந்த நிலையில் கிடந்தனர். இதைப் பார்த்த மக்கள் காவல்துறைக்குத் தகவல் சொல்லி காவல்துறை உடலைக் கைப்பற்றி யுள்ளது. காதலர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுக்கும் மேலாகக் காதலித்து வந்தாலும் ஒரே பகுதியில் வசித்தாலும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இறந்த மாரிமுத்து தலித் சமூ கத்தைச் சார்ந்தவர் என்பதால் சாதிய துவே சத்தோடும், சாதி ஆணவத்தோடும் பெண் வீட்டில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் இருவரும் மர்மமான முறையில் கால்கள் இரண்டும் தரை தட்டிய நிலையில் தூக்கில் தொங்கி யுள்ளார்கள். காதலர்களின் மரணம் எப்படி ஏற்பட்டது என்பதில் சந்தேகம் உருவாகி இருக்கிறது. எனவே காதலர்கள் இருவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பதைக் காவல்துறை எவ்வித பார பட்சமும் இல்லாமல் உரிய முறையில் விசா ரணை செய்து உண்மை விவரங்களைத் தெரிவிப்பதுடன் தவறு செய்தவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்ட ரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக் கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.