மதுரை, ஜூலை 31- மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் நடந்துள்ள சட்ட விரோதமான ஆட்தெரிவு நட வடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். ஆட் தேர்வுக்கு வசூலிக்கப்பட்ட கட்ட ணத்தை உரியவர்களிடம் திரும்ப வழங்க வேண்டும். தேர் வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் வகை யில், பணி நியமனம் தொடர் பான புதிய அறிவிப்பு வெளி யிட்டு பணி நியமன நடவடிக்கை களை அரசு விதிமுறைகளின் படி மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆறு மாதங்களாக இப்பிரச்சனையை கண்டு கொள்ளாமல் உள்ள தமிழக அரசின் உயர்கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்குநர், மதுரை மண்டல கல்வி கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஆகியோர் தலையிட வலி யுறுத்தி மூட்டா அமைப்பின் முதலாம், இரண்டாம் மண்ட லம் மற்றும் டான்சாக் மதுரை மண்டலம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மண்டல - 1 தலை வர் பேரா. சி. ரமேஷ் ராஜ், மண்ட லம் - 2 தலைவர் பேரா. ஈ. பா. ஞானேஸ்வரன், டான்சாக் மண்டலத் தலைவர் இரா. ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மூட்டா பொருளா ளர் பேரா. ஏ. டி. செந்தாமரை கண்ணன் துவக்கி வைத்துப் பேசினார். பேராசிரியர்கள் ஜெ. பெர்மின் ஆஞ்சலோ செல் வின், பெ. க. பெரியசாமி ராஜா, டான்சாக் பா. மனோகரன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக்குழு பேரா. பெ. விஜயகுமார், உயர் கல்வி பாதுகாப்பு மையத்தின் பேரா. முரளி, வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, சமூக அறி வியல் கல்லூரி மீட்பு குழு நாரா யணசாமி, டான்சாக் மாநில பொருளாளர் ராஜ்குமார், ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் பேரா. பெரிய தம்பி, டான்சாக் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ். முனியசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மூட்டா முன்னாள் தலைவர் பேரா. ச. விவேகானந்தன் நிறைவுரையாற்றினார். ஆர்ப் பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.