districts

img

நலவாரிய குளறுபடிகளை சரிசெய்திடுக!

தேனி, ஜூலை 9- நலவாரிய குளறுபடிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தேனி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் தேனி மாவட்ட பேரவை சனிக்கிழமை சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. பேர வைக்கு ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.சி. காமுத்துரை வரவேற்று பேசினார். மாநி லச் செயலாளர் பி.பொன்ராஜ் பேரவை யை துவக்கி வைத்து பேசினார். சிஐ டியு மாவட்ட பொருளாளர் ஜி.சண் முகம், மாவட்ட நிர்வாகிகள் டி.ஜெய பாண்டி, பிச்சைமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு தேனி மாவட்டச் செய லாளர் எம்.ராமச்சந்திரன் நிறைவுரை யாற்றினார்.

புதிய நிர்வாகிகள்

மாநாட்டில் மாவட்ட தலைவராக அமுதா, மாவட்டச் செயலாளராக ஏ.சி.  காமுதுரை, மாவட்ட பொருளாளராக ரூபி, நிர்வாகிகளாக ராணி, முத்துமணி,  முருகேஸ்வரி, பொன்ராஜ், வேளாங் கண்ணி, ராமுபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முறைசாரா நல வாரியங்களுக்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான முறைசாரா தொழிலா ளர் கண்காணிப்புக் குழுவை மாதந்  தோறும் நடத்த வேண்டும் ஆன்லைன்  பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனு ஆகி யவற்றில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்  மானங்கள் நிறைவேற்றப்பட்டன.