சிவகங்கை கல்வி மாவட்ட அளவில் டேக்வாண்டோ, நீச்சல், சிலம்பம் உள்பட 11 வகையான போட்டிகளில் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று முதன்மை பெற்றுள்ளனர். மாணவிகளை தலைமை ஆசிரியை பேப்லிட், விளையாட்டு ஆசிரியை கலைச்செல்வி, விளையாட்டு ஆசிரியர் ராஜீ, உடற்கல்வி இயக்குநர் பூவேந்தன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்தினர். இப்பள்ளிக்கு போதுமான விளையாட்டு மைதானம் இல்லை. மைதான வசதியை செய்துகொடுக்க வேண்டும் என்று மாணவிகள்,பெற்றோர்கள்,பொதுமக்கள் ஆகியோர் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.