districts

img

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நிதி அமைச்சர் பிரச்சாரம்

மதுரை, பிப்.10-  மதுரை மாநகராட்சி உறுப்பினர் பொறுப்பிற்கு திமுக உள்ளிட்ட தோழ மைக்கட்சிகளின் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 56- ஆவது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் வை. ஜென்னி, திமுக சார்பில் 57-ஆ வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் இந்திராணி பொன் வசந்த், 59-ஆவது வார்டு மகாலட்சுமி அழகு சுந்தரம் ஆகியோரை ஆதரித்து நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொன்னகரம் பிராட்வே, கரிமேடு, முரட்டம் பத்திரி ஆகிய பகுதிகளில் புதனன்று பிரச்சா ரம் மேற்கொண்டார்.  பிரச்சாரத்தில் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘தற்போது நடைபெறும் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2016- ஆம் ஆண்டில் நடக்கவேண்டிய தேர்தல். இதற்கு முன் இருந்த அரசு பெரும் ஊழல் செய்த அரசாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஜனநாயகத்தை படு கொலை செய்து அவர்களுடைய ஆட்சிக் காலத்தை முடித்து விட்டது.  உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதது பல்வேறு சிரமங்களை ஏற்டுத்து கிறது. குடிநீர், சாக்கடை, சாலை வசதி போன்றவைகளை பார்க்கவேண்டியது மதுரை மாநகராட்சியின் பணி. இதை நிறை வேற்ற வேண்டியது உள்ளாட்சி உறுப்பி னர்கள் தான். மாநகராட்சியில் உறுப்பி னர்கள் இல்லாமல் ஐந்து ஆண்டுகளைக் கடந்து வந்து விட்டோம். மதுரை மாமன்றத் தில் மக்களின் குறைகளை எடுத்துக்கூறி நிறைவேற்றுவதற்கு ஜென்னியை தேர்ந்தெ டுக்க வேண்டும்’’ என்றனர்.  பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், பகுதிக் குழுச் செயலாளர் வை.ஸ்டா லின், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வசந்தன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. பாண்டி, பி.கோபிநாத், திமுக நிர்வாகிகள் லேத் சிவா, தவமணி, எஸ்.எஸ்.மாறன், பொன்.வசந்த், மதிமுக நிர்வாகிகள் சுருதி  ரமேஷ், துளசி தாஸ், சிபிஐ நிர்வாகி ராம கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.