சின்னாளப்பட்டி, டிச.5- திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 5 அரசு பள்ளிகளுக்கு மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் டேபிள் பெஞ்ச் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய வத்தலக்குண்டு அரசு உயர்நிலைப் பள்ளி யில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பட்டாணி தலைமை வகித்தார்.மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார் முன்னிலை வகித்தார்.திமுக ஒன்றிய செயலாளர் கே.பி. முருகன் பள்ளி மாணவர்களுக்கான டேபிள் பெஞ்சு களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் செல்லம்மாள்,பழைய வத்தலகுண்டு ஊராட்சி மன்ற தலைவர் யசோதை,கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வனிதா திமுக ஒன்றிய அவைத்தலைவர் விரு வீடு செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.இதே போல வி.உச்ச பட்டி, எழுவனம்பட்டி, ராஜதானிகோட்டை குன்னு வாரன்கோட்டை ஆகிய ஊர் அரசு பள்ளிகளுக்கும் டேபிள் பெஞ்ச்கள் வழங்கப்பட்டன.