கடமலைக்குண்டு, ஜூன் 29- தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட வாலிப்பாறை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் உறை கிணறு சேதம டைந்தது. குறிப்பாக கீழ்ப்பகுதி சேதமடைந்து பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டதால் ஆற்றில் வரும் நீர் நேரடி யாக கிணற்றுக்குள் தேங்கி வந்தது. மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நேரங்களில் நீரில் இழுத்து வரப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும் உறை கிணற்றுக் குள் சென்று குடிநீரில் கலந்து வந்தது. குப்பை கழிவு கள் அனைத்தும் உறை கிணற்றின் கீழ் பகுதியில் தேங்கி விடுவதால் ஆற்றில் நீர்வரத்து இருந்த வரை தெருக்குழாய் கள் வழியாக சுத்தமான கநீர் கிடைத்து வந்தது. இந்நிலையில் மழை இல்லாததால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வைகை ஆறு வறண்டது. தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் உறை கிணற்றில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. தற்போது நீர் இருப்பு அடிமட்டம் வரை சென்று விட்ட தால் கடந்த சில நாட்களாக தெருக்குழாய்கள் வழியாக உறை கிணற்றில் தேங்கியிருந்த மாசடைந்த நீர் வர தொடங்கியுள்ளது. இந்த நீரை பிடித்து பயன்படுத்தும் பொதுமக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பொது மக்கள் சிலர் வேறு கிராமங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். மேலும் பணம் கொடுத்து குடிநீர் கேன் களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே உறை கிணற்றில் உள்ள நீரை வாலிப்பாறை பகுதியை சேர்ந்த தனியார் விவசாயிகள் சிலர் முறைகேடாக விவசா யத்திற்கு பயன்படுத்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுத்து உறை கிணற்றை சீரமைத்து அதில் உள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.