districts

ஞாயிறு ஊரடங்கு: மீன் வியாபாரிகள் விலக்கு அளிக்க கோரிக்கை

திருப்பூர், ஜன.6- கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிறன்று அறி விக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவிலிருந்து மீன் வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நல சங் கத்தின் தலைவர் பார்த்தசாரதி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத் தில் ஞாயிற்றுக்கிழமை மொத்த மீன் வியாபாரிகள் சில்லறை  விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். இந்த ஊரடங் கில் மீன் வியாபாரத்தை நம்பிப் பிழைக்கும் 10 ஆயிரம் குடும் பங்கள் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு ஊரடங்கில்  இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மீன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் அல்லது அந்தந்த  பகுதியில் வாகனத்தில் சென்று மீன் வியாபாரம் செய்ய வாகன பாஸ் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.