விருதுநகர் மாவட்ட கூடுதல் தோட்டக்கலை துணை இயக்குநர் சுந்தர்ராஜன் பூவானியில் உருவாக்கியுள்ள மாதிரி பண்ணையத்தில், வாட்டர் ஆப்பிள், நெல்லி, கொடுக்காப்புளி, சீதாப்பழம், நாவல், கிளாக் காய், மகாகனி கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனை விருதுநகர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜசேகர், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜ்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பாலமுருகன், அஸ்வின் ஆகியோர் பார்வையிட்டனர்.