districts

img

பூக்களின் விலை திடீர் அதிகரிப்பு

மதுரை, மே 14- மதுரை பூ மார்க்கெட்டில் சனிக்கிழமையன்று மல்லி கைப்பூ விலை திடீரென்று அதிகரித்துள்ளது. கடந்த  இரண்டு தினங்களாக ரூ. 500 மற்றும் ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ சனிக்கிழமையன்று ரூ. 1200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதர பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. முல்லை மற்றும் பிச்சிப் பூ கிலோ ரூ. 500, சம்பங்கி, பட்டன் ரோஸ் கிலோ ரூ.150 செண்டுமல்லி கிலோ ரூ. 80  என்று விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து மதுரை பூ மார்க்கெட் சங்க நிர்வாகி ராமச்சந்திரன் கூறுகையில், ஞாயி றன்று வைகாசி முதல் தேதி முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இனி வரும் காலங்க ளில் முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றார்.