விருதுநகர் மார்க்கெட்டில் கடலை புண்ணாக்கு விலை திடீர் உயர்வு
விருதுநகர், ஜூலை 23- விருதுநகர் மார்க்கெட்டில் கடலை புண்ணாக்கின் விலை திடீரென ரூ.600 உயர்ந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் அத்தியா வசியப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப் பட்டு வருகிறது. அதில், கடலை புண்ணாக்கு விலை கடந்த வாரம் ரூ.4,400க்கு விற்கப்பட்டு வந்த நிலை யில், இந்த வாரம் ரூ.600 உயர்ந்து 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.5 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. புண் ணாக்குகள் கால் நடைகளுக்கு தீவனமாக பயன்படுத் தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒரே வாரத்தில் திடீரென ரூ.600 உயர்ந்துள்ளதால், கால்நடை வளர்ப்போர் அதிர்ச்சி யடைந்துள்ளனர். மேலும், லயன் உளுந்து விலையானது கடந்த வாரத்தை விட ரூ.300 குறைந்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7700க்கு விற்கப்படுகிறது. பிற அத்தியா வசியப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
தேனியில் 53 பேருக்கு கொரோனா
தேனி, ஜூலை 23- தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை 53 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் கொரோனா மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. சனிக்கிழமை தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்தது.
தேனி விவசாயி கழுத்தறுத்து கொலை: வாலிபர் கைது
தேனி, ஜூலை 23- தேனி அருகே திருமணம் குறித்து கேலி செய்ததாக விவசாயி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத் தில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். உப்புக்கோட்டை அருகே கூழையனூரை சேர்ந்தவர் தவசி (56). அதே பகுதியை சேர்ந்தவர் பிரபு (26). இவர்கள் 2 பேரும் தேனி-குச்சனூர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தவசி, திருமணம் தொடர்பாக பிரபுவை கேலி செய்த தாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தவசியின் கழுத்தை அறுத்தார். ஆத்தி ரம் தீரும் வரை அவரை அறுத்ததால் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த தும் பிரபு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரபாண்டி காவல்துறையினர் விரைந்து வந்து தவசியின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த னர். இதற்கிடையே பிரபு காவல்துறையில் சரண டைந்தார்.
அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு
விருதுநகர், ஜூலை 23- விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விருதுநகர் அருகே உள்ள நாட்டார் மங்களம் பகுதி யில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் சார்பு ஆய்வா ளர் பாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாக ஆய்வுக்குழு பொன்ராஜ், ஆமத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பு லட்சுமி, தொழிலக பாதுகாப்பு துறையைச் சேர்ந்த சித்ரா ஆகியோர் நாட்டார்மங்கலத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. மேலும் 7 மூட்டை கரி மருந்து, 5 கிலோ மணி மருந்து, 50 ஷாட் வெடிகள், 4 இருசக்கர வாகனம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ராவணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை முடக்குச்சாலை -எச்.எம்.எஸ்.காலனி பாலப்பணியால் போக்குவரத்து மாற்றம்
மதுரை, ஜூலை 23- மதுரை முடக்குசாலை - எச். எம். எஸ். காலனி வரை 1190 மீட்டருக்கு மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது கான்கிரீட் பில்லர் களில் உத்திரங்கள் ( Girders ) அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக முடக்குச்சாலை சந்திப்பு முதல் டி.வி.எஸ் ரப்பர் கம்பெனி வரையிலான சாலை யினை தற்காலிகமாக முற்றிலும் போக்கு வரத்திற்கு தடை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் மதுரை நகரிலிருந்து முடக்குச்சாலை, தேனி மெயின் ரோடு. டி.வி.எஸ் ரப்பர் கம்பெனி வழியாக வெளி யூர் செல்லும் பேருந்துகள், கனரக வாக னங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் முடக்குச் சாலை சந்திப்பு முதல் டி.வி.எஸ் ரப்பர் கம்பெனி வரை செல்ல தடை செய் யப்படுகிறது. முடக்குச் சாலை சந்திப்பு வழி யாக டி.வி.எஸ் ரப்பர் கம்பெனி நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, இலகுரக வாகனங்களின் வழித்தடங்கள் ஜூலை 24 முதல் பாலம் கட்டுமானப்பணி முடியும் வரை கீழ்க்கண்டவாறு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மதுரை நகரிலிருந்து வரும் பேருந்து கள், கனரக வாகனங்கள் அனைத்தும் டி.வி.எஸ் ரப்பர் கம்பெனி வழியாக தேனி சாலை செல்ல தடை செய்யப்படுகிறது. ஜூலை 24 முதல் இவ்வாகனங்கள் முடக்குச் சாலை நான்குவழிச்சாலை வழியாக, துவரி மான் கோச்சடை வழியாக செல்ல வேண்டும். மதுரை நகரிலிருந்து வெளி யூர் செல்லும் இரண்டு, மூன்று சக்கர, கார், மினிவேன் போன்ற இலகுரக பயணி கள் வாகனங்கள் மற்றும் தடம் எண் 21 கொண்ட அரசு நகர பேருந்துகள் மட்டும் காளவாசல் சந்திப்பு - சம்மட்டிபுரம், டி.வி.எஸ் ரப்பர் கம்பெனி - எச்.எம்.எஸ் காலனி சந்திப்பு வழியாக விராட்டிபத்து மற்றும் அச்சம்பத்து வழியாக செல்ல லாம். நாகமலைபுதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழியாக நகருக்கு வரும் இரு சக்கர வாக னங்கள், மூன்று சக்கர வாகனங்கள் கார், மினி வேன் போன்ற இலகுரக வாக னங்கள் வழக்கம்போல் அச்சம்பத்து - விராட்டிபத்து டோக் நகர் திரும்பி கோச் சடை முடக்குச்சாலை வழியாக நகருக்கு செல்ல வேண்டும். நாகமலை புதுக் கோட்டை நான்கு வழிச்சாலையிலிருந்து அச்சம்பத்து வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் வர விதிக்கப்பட்ட தடை தொடர்கின்றது. மேற்படி வாகனங்கள் நான்கு வழிச் சாலை - துவரிமான் கோச்சடை - முடக்குச் சாலை வழியாக நகருக்குள் வர வேண்டும். இதில் அரசு மினி பேருந்துகள் மட்டும் விராட்டிபத்து, அச்சம்பத்து ஆகிய பகுதி யிலிருந்து டோக் நகர் வழியாக பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லலாம். எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டி கள் அனைவரும் மேற்கண்ட வாகனப் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் 60 அடியை எட்டிய வைகை அணை
தேனி, ஜூலை 23- வைகை அணையின் நீர்மட்டம் பருவமழையால் முழுக் கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் சீராக குறைந்து 55 அடிக்கும் கீழ் சென்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிக ரித்தது. மேலும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டு மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 60.20 அடி யாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 1852 கன அடியாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.90 அடியாக உள்ளது. 861 கன அடி நீர் வருகிற நிலை யில் 2016 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 49.60 அடியாக உள்ளது. 21 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 71.17 அடியாக உள்ளது. ஒரு கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழையளவு: பெரியாறு 4, தேக்கடி 2, கூடலூர் 1.7, உத்தமபாளையம் 1.2 மி.மீ. பதிவாகியுள்ளது.
செல்போன் கடையை உடைத்து திருட்டு
நத்தம், ஜூலை 24- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிபட்டி காவேரிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சதீஷ் (வயது27). இவர் சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செல்போன்கடை நடத்தி வருகிறார். இவர் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார்.சனிக்கிழமையன்று காலையில் கடையை திறக்க வரும்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.2 ஆயிரம் பணம், 12 பேட்டரிகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் சதீஷ்புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காந்திகிராம பல்கலையில் கருத்தரங்கம்
சின்னாளபட்டி, ஜூலை 22- திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை சார்பாக வேதியியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் ஜூலை 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் பன்னாட்டு வலைதள கருத்தரங்கம் நடைபெற்றது. மலேசியா, சவுத் கொரியா, ஜப்பான் மற்றும் இந்தி யாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களி லிருந்து அறிவியல் வல்லுநர்கள் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினர். வேதியியல் துறை தலைவரும் பேரா சிரியருமான முனைவர் இளங்கோ வரவேற்புரை ஆற்றி னார். பேராசிரியர் சேதுராமன் சிறப்புரையாற்றி னர். பேரா. ஆபிரகாம் ஜான் விளக்கவுரையாற்றினார். பிற நிறுவனங்களிலிருந்தும் காந்திகிராம பல்க லைக்கழகத்திலிருந்தும் மொத்தம் 150 ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சி ஆய்வுகளை தெரிவுபடுத்தினர்.