மதுரை பூ மார்க்கெட்டில் சனிக்கிழமையன்று மல்லிகைப்பூ விலை திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது கடந்த இரண்டு தினங்களாக ரூ. 500 மற்றும் ரூ. 600 க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ சனிக்கிழமையன்று ரூ 1200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இதர பூக்களின் விலையும் தற்போது முல்லை மற்றும் பிச்சிப் பூ கிலோ ரூ. 500, சம்பங்கி, பட்டன் ரோஸ் கிலோ ரூ.150 செண்டுமல்லி கிலோ ரூ. 80 என்று இதர பூக்களின் விலையும் சற்று விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மதுரை பூ மார்க்கெட் சங்க நிர்வாகி ராமச்சந்திரன் கூறுகையில் ஞாயிறன்று வைகாசி முதல் தேதி முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது இனி வரும் காலங்களில் முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று கூறினார்.