districts

img

புறநகர் ரயில் சேவை 658 ஆக அதிகரிப்பு

தாம்பரம்,பிப்.14- கொரோனா நோய் தொற்று குறைந்துவதுவதை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல் புற நகர் மின்சார ரயில்களில் பயணம் செய்ய இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு முன்பு இயக்கப் பட்டதைப் போல், திங்கள் முதல் மீண்டும் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வார நாட்களில் சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் 74 சேவைகளும்,சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத் தில் 84 சேவைகளும், சென்னை- கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் 80 சேவைகளும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மார்க்கத்தில் 240 சேவை களும் என மொத்தம் 658 நடையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் அதிக அளவு ரயில் சேவை உள்ளதால் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலும் திங்களன்று குறைந்து காணப்பட்டது. ரயில் சேவை அதிகரித்து இருப்பதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.