districts

img

முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது

தேனி, மே15- முல்லைப் பெரியாறு அணையில் பருவ காலங்க ளின் போது ஏற்படும் மாற்றங்களை கண்கா ணித்து பராமரிக்க, மூவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த மூவா் குழுவுக்கு உதவியாக, ஐந்து போ் கொண்ட துணைக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் 27-ஆம் தேதி மத்திய நீர்வள  தலைமை  கண்காணிப்புக் குழு அணைப் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.  தற்போது அணையின் நீர்மட்டம் 118 அடியாக உள்ள நிலையில் திங்க ளன்று, மத்திய நீர்வள  துணைக் கண்காணிப்புக் குழுத் தலைவரான நீா்வள ஆணைய செயற்பொறியா ளர் சதீஷ்குமார், தமிழக பிரதிநிதிகளான பெரியாறு சிறப்புக் கோட்டச் செயற் பொறியாளர் சாம் இர்வின் , உதவிச் செயற்பொறியாளா் டி.குமார் மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகளான கட்டப்பனை  நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஹரிகுமார் உதவிப் பொறி யாளர் பிரசீத்  ஆகியோர் பிரதான அணை, பேபி அணை, கேலரி பகுதி, மத குப் பகுதி மற்றும் மழையின் அளவு, அணையின் நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்  குமுளி யில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்புக் குழு அலுவலகத்தில், துணைக் குழுவினா் ஆலோசனை நடத்தினர்.  அதிகாரிகள் கூறுகை யில், அணையின் மதகு ளில் ஆர்1, வி1 மற்றும் வி3 இயக்கம் சரிபார்க்கப் பட்டதில் அதன் இயக்கம் சீராக இருந்தது. அதுபோல் அணையின் சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) நிமிடத் திற்கு 25.68 இருந்தது. இது இன்றைய (நேற்று) நீர்மட்டம் 118 அடிக்கு  மிகத் துல்லியமாக உள்ளது. இதனால் அணை பலமாக உள்ளது என்றனர்.  ஆலோ சனைக் கூட்டத்தின் முடிவு கள் கண்காணிப்பு குழுவி னருக்கு அனுப்பி வைக்கப் பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.