மதுரை, ஜூன் 5 மதுரை மக்களவைத் தொகுதியில் நடை பெறும் பணிகள் மேலூர் சட்டமன்றத் தொகு திக்குட்பட்ட கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றி யத்தை உள்ளடக்கிய ஊராட்சித் தலைவர்க ளுடன் சு.வெங்கேடசன் எம்.பி., சந்தித்துப் பேசினார். தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து நடைபெற்ற வரும் பணிகளைப் பார்வையிடவும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும், மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறவும் அவர் கொட்டாம்பட்டி பகுதிக்கு திங்களன்று வந்திருந்தார் முதலாவதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட தும்பைபட்டி ஊராட்சி செட்டியார்பட்டி விலக்கு, வலைச்சேரிபட்டி ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு பேருந்து நிறுத்த நிழற்குடைகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி செய லர்களுடன் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துரையாடினார்.
அப்போது, மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் நடக்கும் பணிகள், ஊராட்சி ஒன்றிய பொது நிதி, ஊராட்சி பொது நிதியில் நடக்கும் பணிகள் குறித்தும் புதியதாக தொடங்க உள்ள பணி கள் குறித்தும் ஊராட்சித் தலைவர்கள் விளக்கினர் மக்கள் சந்திப்பு நிகழ்வில், கொட்டாம் பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கள் அன்பரசு, செல்லப்பாண்டி, தும்பைப் பட்டி ஊராட்சித் தலைவர் எஸ்.அயூப்கான், வலைசேரிப்பட்டி ஊராட்சித் தலைவர் கே.சக்திபிரியா, கொட்டாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.என்.பாலசுப்ரமணி யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, தாலுகா செயலாளர் எம்.கண்ணன், எஸ்.பி.மணவாளன், வீ.அடக்கிவீரணன், பி.எஸ்.ராஜாமணி, சி.எஸ்.மணி, ஏ.தனசேகரன், சி.அடைக்கன், பி.முத்துலெட்சுமி, கே.ஆனந்த், ஏ.ராஜேஸ்வரன், கே.கதிரே சன், பி.குமரன் ஆகியோர் பங்கேற்றனர். ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.127.18 கோடி மதிப்பீட்டில் மேலூர் தாலு காவிற்கு உட்பட்ட மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 88 கிராம ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது இதனொருபகுதியாக கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 19 ஊராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பணியை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார்.