மதுரை, டிச.30 - மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மேலூரில் தாலுகா அலுவலகம் அருகே பயணிக ளுக்கான புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகளை வெள்ளியன்று மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் ,மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன், தாலுகா குழு உறுப்பினர்கள் மற்றும் மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், பொறி யாளர் பட்டுராஜன், மேலூர் நகர் மன்றத் தலைவர் யூ.முமகது யாசின், துணைத் தலை வர் இளஞ்செழியன், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.