இராமநாதபுரம், ஜூன் 27- இராமநாதபுரத்தில் பேருந்து நிலையம் விரி வாக்கம் செய்யும் பணிக்காக தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்தி ரன் ஆய்வு செய்தார். இராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கும் செய்யும் பணி விரைவில் தொடங்க உள் ளது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளை மாற்று இடத்தில் நிறுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்தி ரன் திங்கட்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார் மேகம்,ஆணையர் நஜிதா பர்வீன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.