districts

img

மழைநீர் தேங்கும் வாய்க்கால்களில் உறுஞ்சுகுழி அமைக்க ஆய்வு

சின்னாளப்பட்டி, அக்.9- மழைக்கால முன்னெச்சரிக்கையாக கிராமங்களில் மழைநீர் தேங்கும் ஓடைகளில் உறுஞ்சுகுழி அமைக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதி களில் சிறுபள்ளம் மற்றும் வாய்க்கால்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு காய்ச்சல் உட்பட உடல் உபாதைகள் ஏற்படாமலிருக்க  உறுஞ்சுகுழி  அமைக்கவும்,அதிகளவு கழிவுநீர் வெளியேறும் தனிநபர் வீடுகளில் உறுஞ்சுகுழி அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நிலக்கோட்டை யூனியன் பிடிஓ (கிராம ஊராட்சி)  அண்ணாத்துரை,பிடிஓ பஞ்சவர்ணம் தலைமையில், வட்டார ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஏற்பாட்டில் ஊராட்சி மன்றதலைவர்கள் ,கவுன்சிலர்கள் முன்னிலை யில் கிராமங்கள் தோறும் சென்று ஆய்வு செய்து வரு கின்றனர். இதனால் எதிர்வரும் மழைக்காலத்தில் கிரா மங்களில் பள்ளமான பகுதி மற்றும் வாய்கால்களில் மழை நீர் தேங்குவதை தடுக்க முடியும் என கூறப்படுகிறது.