திருவில்லிபுத்தூர், ஏப்.6- விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத் தப்படும் திட்டப்பணிகள் குறித்து திட்ட இயக்குநர் திலகவதி திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆய்வு செய்தார். சாம்பல் நிற நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கிடைமட்ட உறிஞ்சு குழி அமைத்தல், குப்பைகள் தரம் பிரித்தல், மண்புழு உரக்கூடம் செயல்பாடுகள், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மல்லி கிராம ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மேற்கொள் ளப்படும் குறுங்காடுகள் பணிகள், மானகசேரி சேரி ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பள்ளி கட்டிடப் பணி ஆய்வு செய்யப்பட்டது.