districts

img

கதர் துணியில் பாரதியாரின் ஓவியங்களை வரைந்த மாணவ- மாணவிகள்

திருநெல்வேலி, டிச.11- அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின்  26-வது அகில இந்திய மாநாட் டினை முன்னிட்டு, பாரதி  பிறந்த நாளான ஞாயிற்றுக் கிழமை நெல்லை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்  கம் மற்றும் நெல்லை சிவ ராம் கலைக்கூடம் இணைந்து நடத்திய, முண்டாசுக் கவி ஞன் பாரதியின் 26 ஓவியங் களை கதர் துணியில் வரை யும் நிகழ்ச்சி எல்ஐசி கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காப்பீட்டுக் கழக ஊழியர்  சங்கம் நெல்லை கோட்டத் தின் பொதுச்செயலாளர் பொன்னையா தலைமை தாங்கினார். தென் மண்டலம் காப்பீட்டு ஊழியர் கூட்ட மைப்பின் முன்னாள் பொதுச்  செயலாளர் சுவாமிநாதன் வாழ்த்துரை வழங்கினார். பாரதி ஓவியம் வரையும் நிகழ்ச்சியை சிவராம் கலைக்  கூடத்தின் ஓவிய ஆசிரியர் கணேசன் ஒருங்கிணைத் தார். நிகழ்ச்சியில் நெல்லை  கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் கோட்ட  நிர்வாகிகள்  மதுபால், கிருஷ் ணன், பட்டன், செண்பகம், மகாதேவன், நரேஷ் கண்ணா,  சீனிவாசன், மகளிர் துணைக் குழு அமைப்பாளர் ராஜேஸ்  வரி ஆகியோர் கலந்து கொண் டனர்.