சின்னாளப்பட்டி, நவ.22- திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் ஒன்றியம் சேரன் வித்யா லயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்களிடம் கேட்டு பணம் வாங்கி வந்து மாணவ,மாணவியருக்கு தேவையான எள்ளுருண்டை, கடலை மிட்டாய், தொக்கு உருண்டை, முட்டை போண்டா பனியாரம் மற்றும் பலவித உணவுப் பண்டங்களை சுமார் மூன்று லட்சத்திற்கு மேல் விற்பனை செய்து முதலீடு மட்டும் எடுத்துக் கொண்டு அதில் கிடைத்த லாபம் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் வைத்து ஆதரவற்ற முதியோர்களுக்கு போர்வை, வேஷ்டி சட்டை, செருப்பு, உணவு ஆகியவை களை வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. ஆதரவற்ற முதியோர்களுக்கு பள்ளியின் தாளாளர் சிவக்குமார், முதல்வர் திலகம் மற்றும் மாணவ மாணவி கள் பொருட்களை வழங்கி கௌரவித்தனர். இதுகுறித்து பள்ளி முதல்வர் திலகம் கூறுகையில், பள்ளியில் ஒவ் வொரு விழாவாக தேர்ந்தெடுத்து குறிப்பாக மார்ச் 8 உழைக்கும் பெண்களாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கிறோம். அதே போல் விற்பனை உணவுத் திருவிழாவை மாணவியர் மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியர்கள், அலுவலக உதவி யாளர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்தார்கள். மேலும் சாலையில் ஆதரவற்று இருக்கும் முதியோர்களை கண்டெடுத்து அவர்களை உரிய ஆசி ரமத்தில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்றார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் மேலாளர் பாரதி ராஜா, சமூக ஆர்வலர் குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்தி ருந்தனர்.