தென்காசி, ஆக. 23 கடையநல்லூர் அரசி னர் தொழிற்பயிற்சி நிலை யத்தில் 2023ம் கல்வியாண்டி ற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கையில் சேர புதிய விண்ணப்பங்கள் ஆக. 31 வரை வரவேற்கப்படு கின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்நுட்ப மையம் 4.0ல் ஈராண்டு தொழிற்பிரிவுகளான ADVANCED CNC MACHIN ING TECHNICIAN (மேம் படுத்தப்பட்ட CNC இயந்திர தொழில்நுட்ப வல்லுநர்;), MECHANIC ELECTRIC VEHI CLE (கம்மியர் மின்சார வாக னம்) மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவான INDUS TRIAL ROBOTICS AND DIGITAL MANUFACTURING (தொழில்துறை ரோபோட் டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர்) ஆகிய படிப்பு களுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் விண் ணப்பிக்கலாம். மகளிருக்கு வயது வரம்பு இல்லை. மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவ ணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைய நல்லூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் அணுகவும். பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐ.டி.ஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 12- ம் வகுப்பு சான்றிதழ் பெற லாம். மேலும் எட்டாம் வகுப்பு முடித்து இரண்டா ண்டு ஐ.டி.ஐ தொழிற் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற வர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம் ) மட்டும் எழுதி 10- ம் வகுப்பு சான்றி தழ் பெறலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு முதல்வர் மீனாட்சி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடையநல்லூர் பண்பொழி ரோடு (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடைய நல்லூர் அருகில்) தொலை பேசி எண் 04633-290270 ல் தொடர்பு கொண்டு விண் ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.