சின்னாளபட்டி, ஜன.3- திண்டுக்கல் மாவட்டம் ஆத் தூரில் அரசு வேலை மற்றும் பொதுத் துறை பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர் களுக்கான 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளை யாட்டைச் சேர்த்ததற்கு நன்றி தெரிவித்து 12 மணிநேரம் தொட ர்ச்சியாக சிலம்பம் சுற்றும் நிகழ்வு நடைபெற்றது. அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ‘சி’ தன்னார்வ அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது. பழனி சட்டமன்ற உறுப்பினர். இ.பெ. செந்தில்குமார் துவக்கி வைத்தார். ஆத்தூர் அரசு மருத் துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர். லியோன் வினோத்குமார் முன்னிலை வகித்தார். இதில், தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களிலிருந்து 450க்கும் மேற்பட்ட சிலம்ப மாண வர்களும், 40க்கும் மேற்பட்ட சிலம்ப ஆசான்களும் கலந்து கொண்டனர். ஆஸ்கார் புத்தக நிறுவன தலைவர் டி.கதிரவன் சாதனை நிகழ்வில் பங்கு பெற்ற வர்களுக்கு பரிசு கேடயங்களை யும், சான்றிதழ்களையும் வழங் கினார். இந்நிகழ்ச்சியில் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் ஆசிரி யர் சோ.ராமு, கவிஞர்.ம.கண் ணன், ஏவிஆர் ஏஜென்சியின் நிறு வனர் வ.அழகர்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாட் டினை அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் சிலம்ப ஆசான் எம்.செந்தில்குமார் செய்திருந்தார்.