districts

img

“வாராய் வாகை சூட...” பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

மதுரை, ஜூன் 12- கோடை விடுமுறைக்கு பின்  திங்கள்கிழமை தமிழகம் முழு வதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களை பள்ளித் தலைமையாசிரியர், ஆசி ரியர்கள் வரவேற்றனர். பள்ளி  திறக்கும் நாளன்று அனைத்து  மாணவர்களுக்கும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்தி ருந்தது. திங்களன்று காலை ஏராளமான  மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற் சாகமாக வருகை தந்தனர். மாநகராட்சிப் பள்ளியில் கல்வி யாண்டு துவக்கம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு மலர்கள் மற்  றும் கற்கண்டு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். சக மாணவிகளுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வர வேற்ற மாற்றுத்திறனாளி மாண வி்யின் வரவேற்பு நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் காலை முதல்  உற்சாகமாக பள்ளிக்கு வருகை  தந்த மாணவிகள் தங்களது நண் பர்களை பார்த்து மகிழ்ச்சியில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து பள்ளிகளில் கடந்த  கல்வியாண்டில் சிறப்பாக பணி யாற்றிய ஆசிரியர்கள், பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைகள்- பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

வெள்ளிவீதியார் மாநகராட்சிப் பள்ளி

மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பொன்முடியரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகி யவற்றில் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவசப் பாடப்புத்தகங்களை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே. பிரவீண் குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி ஆகியோர் வழங்கி னர். வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும்  776 மாணவிகளுக்கும், பொன்முடி யார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் பயிலும் 689 மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது நிகழ்வில் துணை மேயர் தி.நாக ராஜன், கல்விகுழுத் தலைவர் ரவிச்சந்திரன், மண்டலத்தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் மனோகரன், கல்வி  அலுவலர் நாகேந்திரன், மக்கள்  தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரி யர்கள் உட்பட மாநகராட்சி அலு வலர்கள் கலந்து கொண்டனர்.  அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மதுரை கோ.புதூர், அல்-அமீன்  மேல்நிலைப்பள்ளி மாணவர் களுக்கு “வாராய் வாகை சூட!”  என்ற வரவேற்பு பதாகை வைத்து  உற்சாகமான வரவேற்பு அளிக்கப் பட்டது. பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகிகள் முஹமது ஆதம், முஹமது இதிரிஸ், முஹ மது ஜைனுத்தீன் மற்றும் தலைமை யாசிரியர் ஷேக் நபி ஆகியோர் பாட புத்தகம், நோட்டுகளை வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்து தெரி வித்தனர். உதவித் தலைமையாசி ரியர்கள் ஜாகீர் உசேன், ரஹ்மத் துல்லா மற்றும் ஆசிரியர்- அலு வலர்கள் நிகழ்விற்கான ஏற்பாடு களைச் செய்திருந்தனர்.