திண்டுக்கல், டிச.30- சாணார்பட்டியில் இருபாலர் அரசு கலைக் கல்லூரி துவங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்க சாணார்பட்டி ஒன்றிய மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. மாணவர் சங்க சாணார்பட்டி ஒன்றிய மாநாடு வெள்ளியன்று கோபால்பட்டியில் எம்.இ.நிருபன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.கே. முகேஷ் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட இணை செயலாளர் பி.தமிழ்செல்வன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எம்.சிலம்ப ரசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில இணைச்செயலாளர் ஜி.கே. மோகன் நிறை வுரையாற்றினார். மாநாட்டில் ஒன்றிய தலைவராக நவீன் குமார், செயலாளராக எம்.இ.நிருபன், துணைத்தலைவர்களாக பாண்டியன், ஜீவகனிமொழி, சங்கிலி, துணைச்செயலா ளர்களாக தனகோபி, ஜீவானந்தம், நிவா ஷினி உட்பட 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒன்றிய பகுதிகளில் பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும். கோபால்பட்டி, வேம்பார் பட்டி, மணியகாரன்பட்டி ஆகிய பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பறைகளை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.