districts

img

குடிநீர் கேட்டுக் காலிக்குடங்களுடன் போராட்டம்

இராமநாதபுரம், ஆக.7- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சி பள்ளமோர் குளம் கிராமத்தில் 160 குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமத்திற்குப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குடிநீர் வழங்கவில்லை. ஊராட்சி சார்பில் அந்தப் பகுதியில் குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் வருவதில்லை இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து திங்களன்று தன்னெழுச்சியாகத் திரண்ட, பள்ளமோர் குளம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒரு வாரத்தில் பள்ளமோர் குளத்திற்குக் குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்துப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.