districts

கூலி உயர்வு வழங்காததால் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்

இராஜபாளையம், ஜூலை 3- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி  உயர்வு வழங்காதபட்சத்தில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இராஜபாளையத்தில் ஆவரம்பட்டி, தெற்கு வைத்தியநாதபுரம் தெரு, தோப்பட்டி  தெரு ஆகிய பகுதிகளில் சிறு விசைத்தறி மூலம் பருத்தி சேலை தயாரிக்கப்படுகிறது. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு  விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் ஆண்களும், பெண்களும்,  சேர்ந்து சுமார் இரண்டாயிரம் நபர்கள் விசைத் தறி தொழிலாளர்களாக பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் ஆவரம்பட்டி விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்  கத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்களி டம், விசைத்தறி தொழிலாளர்கள் 12 மணி நேரம் வரை வேலை பார்த்தும் அதற்கு தகுதி யான கூலி கிடையாது. விலைவாசி காரண மாக தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் தொழிலாளர்களுக்கு எந்த வித மான அடிப்படை வசதிகளும் மருத்துவ வசதி களும் செய்து கொடுப்பது இல்லை, தொழி லாளர்களுக்கு எந்த விதமான சலுகை களும் கிடையாது. இந் நிலையில் தொழிலா ளர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமையாளர்களிடம் பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. அதனால் கடந்த  05.06.2022ம் தேதி முதல் கூலி உயர்வு மற்றும்  8.33 சதவீத போனஸ் கேட்டு விசைத்தறி தொழி லாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால் தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் கருதி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் கூட்டத்தில் விசைத்தறி தொழிலா ளர்களுக்கு கூலி உயர்வும், அடிப்படை வசதி களும், அரசின் சலுகைகளை பெற்று தரக்  கோரி அனைத்து விசைத்தறி தொழிலாளர் களும் கையொப்பம் இட்ட ஒரு மனுவை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கொடுத்த னர். பின்னர் தொழிலாளர் உதவி ஆணை யர் மின்னல்கொடி தலைமையில் இரு தரப்பினரிடமும் பேசியதில் எந்த முடிவும் எட்டவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 5 அன்று நடைபெறும் என அறிவிக்  கப்பட்டுள்ளது. கடந்த 30 நாள்களுக்கு மேலாக வேலையில்லாமல், பசியும் பட்டினி யுமாக தவிக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் உணவு அளிக்க முடிவெடுத்து பொது மக்கள் சார்பில் விசைத்தறி தொழிலாளர்கள் பசி, பட்டினியை போக்க கடைக்காரர்கள் வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் நிதி வசூலித்து பொது இடத்தில்  கஞ்சி சமைத்து கஞ்சி தொட்டி திறக்க உள் ளோம் என்று விசைத்தறி தொழிலாளர்கள் கூறினர்.