தேனி, ஜூலை 12- கேரள அரசை போல் உரித்த தேங்காய் கிலோ ரூ. 50 ,கொப்பரை தேங்காய் ரூ.145 என அரசு கொள் முதல் செய்ய வேண்டும். ரேசன் கடை களில் தேங்காய் எண்ணெய் விநியோ கம் செய்ய வேண்டும்.தென்னை விவ சாயிகளுக்கு உரம், பூச்சி மருந்து கள் மானியத்துடன் வழங்க வேண் டும். தென்னை மரத்திற்கு அரசே காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு தென்னை விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் ஜூலை 12 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் தேனி மாவட்ட தலை வர் டி.அம்சராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப் பன், மாவட்ட செயலாளர் டி.கண் ணன், மாவட்ட தலைவர் எஸ்.கே. பாண்டியன் ,தென்னை விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் எம்.வி. முருகன், நிர்வாகிகள் எம்.மணி கண்டன், ஏ.பி.செல்வராஜ் ,சுப் பையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆட்சியர் அலுவல கம் முன்பு தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை
மதுரை மாவட்டம் சோழவந் தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக நடைபெற்ற தேங் காய் உடைக்கும் போராட்டத்திற்கு தென்னை விவசாயசங்க மாவட்ட தலைவர் ஏ.பிச்சை தலைமை வகித் தார். மாவட்ட பொருளாளர் எம்.சீத்தாராமன் முன்னிலை வகித்தார் .தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி துவக்கி வைத்து பேசினார். தென்னை விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.ஆர்.முத்து பேயாண்டி, விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கே.முரு கேசன் ஆகியோர் விளக்கிப் பேசி னர். தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.நாகேந்தி ரன் நிறைவுரையாற்றினார். மாவட் டக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர் கனரா வங்கி முன்பு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டத் தலைவர் முத்தையா தலைமை தாங்கினார் மாவட்ட செய லாளர் காளிதாஸ், மாவட்ட பொருளா ளர் ராமராஜ், மாவட்ட துணைத் தலை வர் பெருமாள் உள்ளிட்டோர் விளக் கிப் பேசினர். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி. முருகன், தமிழக விவசாய சங்கத் தின் மாவட்ட தலைவர் என்.ஏ. ராமச் சந்திர ராஜா, சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.திருமலை ஆகி யோர் ஆதரித்துப் பேசினர். விவசாயி கள் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் நிறைவுரையாற்றி னார். மாநிலக்குழு உறுப்பினர் பீம ராஜா மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.
திருப்பாச்சேத்தி
சிவகங்கை மாவட்டம், திருப்பாச் சேத்தியில் மாநில துணைச் செய லாளர் ஜெயராமன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட் டச் செயலாளர் தினேஷ்குமார், ஒன்றி யத் தலைவர் கேசவன், ஒன்றியச் செயலாளர் மதுரைவீரன், ஒன்றிய பொருளாளர் மதியரசு ஆகியோர் விளக்கிப் பேசினர். மாநில துணைத் தலைவர் முத்துராமு,கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் சக்திவேல், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் மோகன், மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பேசி னர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாநில துணைச்செயலாளர் அ. ஜெயராமன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் எம்.முத்து ராமு,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் வி. மயில்வாகணன் முன்னிலை வகித்த னர். மாநிலக்குழு உறுப்பினர் பி.கல் யாண உள்பட பலர் கலந்துகொண்டனர்.