districts

கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவு

இராமநாதபுரம்,மார்ச் 20- கஞ்சா மற்றும் குட்கா போதைப்பொருட் கள் இருக்கக் கூடாது என்ற முனைப்புடன் அதி காரிகள் செயல்பட வேண்டும்.கஞ்சா வியா பாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தர விட்டுள்ளார். சரக அளவிலான காவல்துறை அதிகாரி களுடனான கலந்தாய்வு கூட்டம், தமிழகம் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமையில் ஞாயி றன்று நடைபெற்றது. முதலமைச்சரின் உத்தர வின்படி, தமிழகத்தில் சரக அளவிலான காவல்துறை அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட மாக காஞ்சிபுரம் மற்றும் வேலூர் சரகங் களில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  இதனைத்தொடர்ந்து ஞாயிறன்று காலை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் இராமநாத புரம், சிவகங்கை மாவட்ட காவல்துறை அதி காரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.  இந்த கூட்டத்தில் தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு பேசுகையில்,  கஞ்சா வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது.  நேரடியாக ஆந்திராவுக்கே சென்று குற்றவாளிகளை கைது செய்யப் பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப் பட்டுள்ளதால், கஞ்சா மற்றும் குட்கா போதைப் பொருட்கள் இருக்கக் கூடாது என்ற முனைப்பு டன் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார்.