திருவில்லிபுத்தூர், ஜூலை 11- திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் துவக்க விழா பல்கலை துணைத்தலைவர் முனைவர்.எஸ்.சசி ஆனந்த் தலைமையில் ராஜீவ் காந்தி உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. பதிவாளர் முனைவர் வெ.வாசுதேவன் போட்டி களைத் துவக்கி வைத்தார். முனைவர் எம்.முத்துகண்ணன் வரவேற்புரை வழங்கி னார். மூன்று நாள் போட்டிகளில் கலந்து கொள்வ தற்காக 13,15,17,19 வயதிற்குட்பட்ட 250 வீரர்களும், 180 வீராங்கனைகளும் 22 மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.