districts

img

நீட் தேர்வு வேண்டாம் என போராடி வரும் நிலையில் வெற்றிகரமாக நடத்தியதாக ஒன்றிய அரசின் அறிவிப்பு

நாகர்கோவில், ஜன.17- தமிழ் நாட்டில் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து நீட் தேர்வில் விலக்கு கேட்டு போராட்டம் நடத்திவரும் நிலையில் ஒன்றிய அரசின் சார்பில் “நீட் இந்தியாவில் வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டது” என வெளி யிட்ட அறிக்கை கண்டனத்திற்குரியது என பொது பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரினஸ் கஜேந்திர பாபு கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண் டத்தில் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர், குடியர சுத் தலைவர் ஒப்புதலுக்கு விரைந்து அனுப் பக் கோரி பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் சார்பாக மக்கள் சந்திப்பு இயக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. மார்த்தாண்டம் மதிலகத்திலுள்ள அருள் முனைவர் எம்.எக்ஸ்.ஆர் கலை பண்பாட்டு மையத்தில்  நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை மாவட்ட தலைவர் அருட் பணி சகாய தாஸ் தலைமை வகித்தார். பொ துப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, நீட் தேர்வின் அபாயங்கள் குறித்தும் அது குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். பின்னர் அவர் பேசுகை யில், ஜெர்மனி நாட்டில் எப்படி நாட்டு மக்க ளுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை யை இழக்கவைத்து மறைமுகமாக சர்வாதி கார ஆட்சியை ஹிட்லர் ஏற்க வைத்தாரோ  அது போல ஒரு சதிகார வேலை இந்தியாவி லும் நடக்கிறது. நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவுக்கு வேட்டுவைக்க தமிழ் நாட்டு ஆளுநர் துணை போகிறார். பிற மாநிலங்களிலும் நீட் நடைமுறையில் உள்ள பொழுதிலும் தமிழ் நாடு மட்டும் தான் அதன் அபாயத்தை உணர்ந்து முதலில் குரல் கொடுத்து இருக்கிறது மற்ற மாநிலங்களும் இதனை வரவேற்கும். இது தான் வரலாறு. இந்தியாவில் 1 முதல் 12 வகுப்பு வரை 50 சதவிகிதம் மாணவர்களுக்கும் அதிக மானோர் பல வகையில் பயனளிக்கும் அரசுப் பள்ளியில் தான் பயின்று வருகிறார்கள். மிக அதிக மதிப்பெண் பெற்றோர் கூட நீட் தேர்வில் வெற்றி பெறுவது கேள்விக் குறியே. காரணம் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பாடத் திட்டத்தை பணம் பிடுங்கி தனியார் நடத்தும் பயிற்சி கூடங்க ளுக்கு சென்று அவர்கள் கேட்கும் லட்சங்க ளை கொட்டி கொடுத்து பயிலும் சூழல் இங்கு எல்லோருக்கும் இல்லை. மேலும் நீட் தேர்வானது நன்கு பயின்ற திறமையான ஏழை மாணவர்களுக்கு வர வேண்டிய அரசு மருத்துவ கல்லூரி இடங்களை பிடுங்கி தேர்வு நிலையங்களில் அதிகாரி கள் உதவியுடன் பித்தலாட்டம் செய்பவர்க ளுக்கும் கல்வி இடைதரகர்களுக்குமே தொடர்ந்து வழங்கி வருகிறது. இது திற னுள்ள மாணவர்களின் மருத்துவ கனவை கேள்விக்குறியாக்குகிறது.  உச்சநீதி மன்றத்தினால் மறுக்கப்பட்ட 10 D சட்டத்தை மீண்டும் அமல்படுத்தி மாநில உரிமைகளை பறிக்கும் திட்டத்தையே ஒன்றிய அரசு அமல்படுத்தி வருகிறது. தமிழ் நாட்டில் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து நீட் தேர்வில் விலக்கு கேட்டு போராட்டம் நடத்திவரும் நிலையில் ஒன்றிய அரசின் சார்பில் “நீட் இந்தியாவில் வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டது” என வெளியிட்ட அறிக்கை கண்டனத்திற்குரி யது.  இதற்கு மேலும் தமிழ் நாட்டில் நீட் தேர்வினை ரத்து செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் மேலும் பல தரப்பட்ட போராட்டங்களை பொது பள்ளிக ளுக்கான மாநில மேடை முன்னெடுக்கும். நீட் எதிர்ப்பிற்கான அடுத்த கட்ட நகர்வு க்கு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தயா ராக இருக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.