சின்னாளபட்டி, ஆக.7- மாநில அளவில் நடைபெற்ற ரோல்பால் போட்டி யில் மாணவிகள் பிரிவில் திண்டுக்கல் மாவட்ட அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ராஜன் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ரோல் பாய்ஸ் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. 32 மாவட்டங்கள் பங்கேற்றப் போட்டியில் இறுதிச்சுற்றில் மாணவிகள் பிரிவில் திண்டுக்கல் மாவட்ட அணியும், மதுரை மாவட்ட அணியும் மோதின, இதில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்துச் சாம்பி யன் பட்டத்தை வென்றது. இரண்டாவது இடத்தை மதுரை அணியும், மூன்றாவது இடத்தை திருச்சி ராப்பள்ளி, நீலகிரி அணிகள் பெற்றன. மாணவர்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் கடலூர் மாவட்ட அணியும் செங்கல்பட்டு மாவட்ட அணியும் மோதின. இதில் கடலூர் அணி வெற்றி பெற்று முதலி டத்தைப் பிடித்துச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு அணியும், மூன்றாவது இடத்தை திண்டுக்கல் மாவட்டமும் கோயம்புத்தூர் மாவட்டமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வில் ரோல்பால் சங்கத்தின் தென்னிந்தியச் செய லாளர் சுப்பிரமணியம், போட்டியின் அமைப்பாளரும் திண்டுக்கல் ரோல்பால் சங்கச் செயலாளருமான மாஸ்டர் பிரேம்நாத் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.