சிவகங்கை, ஜூன் 4- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாடு சிவகங்கையில் ஆகஸ்ட் 5,6 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது என்று மாநிலத் தலைவர் ரமேஷ் சிவகங்கையில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித் தார். மாநில மாநாட்டிற்கான வர வேற்புக்குழு அமைப்புக்கூட்டம் சிவகங்கையில் ஜூன் 4 அன்று வேலுச்சாமி தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றுப் பேசி னார். மாநிலத் தலைவர் இரமேஷ் தொடக்க உரையாற்றினார். மாநி லப் பொதுச்செயலாளர் பாரி, மேல் நிலை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கும ரேசன், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், மாநிலப் பொருளா ளர் விஜயபாஸ்கர், மாநில துணைச் செயலாளர்கள் திருவேங்கன், பாஸ்கர்பாபு, மாநிலச்செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மாநில மாநாட்டு வர வேற்புக் குழு தலைவராக சங்கர சுப்பிரமணியன், செயலாளராக மாவட்ட செயலாளர் ராதாகிருஷ் ணன், பொருளாளராக பெரியசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.