districts

பொங்கல் விடுமுறை: ஸ்டாலின் கோரிக்கை கேரளா அரசு ஏற்பு

சென்னை,ஜன.13- தமிழகத்தில் பொங்கல் திருநாள் தனிப் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வரு கிறது. பொங்கலை முன்னிட்டு சென்னை யில் இருந்து மட்டும் 5 லட்சம் பேர் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதி களை நோக்கி தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், கேரள மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஆறு  மாவட்டங்களில் தை முதல் நாள் (ஜனவரி  14) அன்று வட்டார பொங்கல் விடுமுறை பெற்றுத் தர வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. கேரளத் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைக்கப் பட்டது. இதனை ஏற்று இன்று தமிழக முதல்வர் கேரள முதல்வருக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஜனவரி 14-ல் பொங்கல் விடுமுறை அறிவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் தமிழக முதல்வரின் இந்த கோரி க்கையை ஏற்று, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான கொல்லம், இடுக்கி,  வயநாடு, பத்தனம்திட்டா, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (ஜன.14) பொங்கல் விடுமுறை அறிவித்து கேரள  முதலமைச்சர் பினாராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.