தூத்துக்குடி, பிப்.26- தூத்துக்குடி சுனாமி காலனி புனித அந்தோனி யார் திருத்தலத் திருவிழா வெள்ளியன்று கொடியேற் றுத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி ஹார்பர் சகாய மாதா ஆலய பங்கில் உள்ள சுனாமி மீனவர் காலனி புனித அந்தோணி யார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சகாய மாதா ஆலய பங்குத்தந்தை லயோலா டி ரோஸ் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து குறுக்குச் சாலை கத்தோலிக்க மறை வட்டார குருவானவர் மார்ட்டின், குடும்ப நிலை குழு தலைவர் ஜவகர், வேம்பார் பங்குத்தந்தை ரோஷன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.