districts

மதுரை முக்கிய செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

எழுத்தாளர் மதுரை நம்பிக்கு பாராட்டு விழா: இடம்:  லயோலா தொழில்நுட்ப கல்லூரி வளாக அரங்கு, தேம்பா வணி, நாள்: 9.9.2023 பங்கேற்போர்: சு.வெங்கடேசன் எம்.பி., ஆதவன் தீட்சண்யா, எஸ்.கண்ணன், ஏற்பாடு: மதுரை  மாநகர் தமுஎகச

கல்லூரி மாணவர்களுக்கு  பேச்சு போட்டி

திண்டுக்கல், செப்.9- தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் அண்ணா பிறந்த தினத்தையொட்டி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் செப்டம்பர் 15 அன்று கல்லூரி மாணவர் களுக்கான பேச்சு போட்டி நடைபெறுகிறது.  பேச்சு போட்டிகள் அண்ணாவும் மேடை பேச்சும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் நடைபெறும்.  வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ம் பரிசு ரூ.3 ஆயிரம்,  3ம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் பரிசுகள் வழங்கப்பட  உள்ளன. பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவ, மாணவியர்களை அந்தந்த கல்லூரி முதல் வர்கள் தேர்ந்தெடுத்து போட்டிக்குரிய பரிந்துரை கடிதத்து டன் அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆட்சியர் பூங்கொடி கேட்டுக்கொண்டுள்ளார். 

தொழிலாளி கொலை: 2 பேர் கைது

நத்தம், செப்.9- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே எல்.வலை யபட்டியை சேர்ந்தவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளி சீனி (35). இவர் வியாழனன்று வீமாஸ் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க சென்ற வர் கீழே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  இந்நிலையில் சீனி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் நடத்திய விசாரணையில், வத்திபட்டியில் உள்ள ஆசை என்பவரது கடையில் பொருட்கள் வாங்கும் போது வாய் தகராறு ஏற்பட்டுள் ளது. அப்போது ஆசை, தென்னரசு உள்ளிட்ட 4 பேர் சீனியை தாக்கியதாகவும், பதிலுக்கு சீனி அரிவாளை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து சீனியை பின் தொடர்ந்த 4 பேரும்  வீமாஸ் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது  வாங்கும் போது அவரை அடித்து கீழே தள்ளியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சீனி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.  இது தொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த தென்ன ரசு, வலையபட்டி ஆசை ஆகியோரை காவல்துறை யினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் தலைமறைவாக உள்ள பாபு, நல்லியப்பன் ஆகி யோரை தேடி வருகின்றனர்.

கிராம உதவியாளர் வேலை: ரூ.3 லட்சம் மோசடி

அருப்புக்கோட்டை, செப்.9- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சத்திய வாணிமுத்து காலனியைச் சேர்ந்தவர் வேல்தாய் (48). இவ ரது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக பாலையம்பட்டி யைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் ஆசை வார்த்தை  கூறியுள்ளார்.  இதை நம்பிய வேல்தாய், 4 தவணைகளில் ரூ.3  லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால், வேலை வாங்கித்  தராமல் சொக்கலிங்கம் தலைமறைவாகி விட்டாராம். எனவே, இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் வேல்தாய் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சொக்கலிங்கத்தை தேடி வருகின்றனர்.

நகைகளை திருடியவர் கைது

திருவில்லிபுத்தூர், செப்.9-  திருவில்லிபுத்தூர் பெரு மாள் சேரியைச் சேர்ந்த அர்ஜூனன் (40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரகதம் (35).  இந்நிலையில், மரகதம் வீட்டை பூட்டிவிட்டு சாவி யை குளியலறை அலமாரி யில் வைத்து விட்டு  வேலைக்குச் சென்றுள் ளார். மீண்டும் வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது.  இதுகுறித்து திருவில்லி புத்தூர் நகர் காவல் நிலை யத்தில் மரகதம் புகார் அளித்தார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடு பட்டதாக கொலூர் பட்டி யைச் சேர்ந்த வன்னியராஜ் (42) என்பரை கைது செய்த னர்.

சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு

திருச்சுழி, செப்.9- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் செல்லையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 2-ல் திருமணம் நடைபெற்றுள்ளது.  இதுகுறித்து சைல்டு கெல்ப் லைனுக்கு தகவல் வந்தது. எனவே,  ஊர்நல அலுவலர் பரிபூரணம் அச்சிறுமியிடம் விசாரணை மேற்கொண் டார். இதில் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. எனவே, இது குறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த மாயக்கண்ணன் (27), அவரது தந்தை சோலைமலை, தாய் பஞ்சம்மாள், சிறுமியின் தாயார் அழகு, தந்தை ராமர்  ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மலைச்சாலையில் தீ பிடித்த கார் 

தேனி, செப்.9-  சிவகாசி முத்துநகரை சேர்ந்தவர் தங்கம் மகன் பாபு (40).  இவரது உறவினரின் திருமணம் கேரள மாநிலம் சூரியநெல்லி என்ற இடத்தில் ஞாயிறன்று நடக்க உள்ளது. இதில், பங்கேற்ப தற்காக பாபு, பாபுவின் தம்பி சுரேஷ் (35), இவர்களது தாயார்  ராமலட்சுமி (59) ஆகியோர் ஒரு காரில் போடிமெட்டு வழியாக  சூரியநெல்லிக்கு சென்று கொண்டிருந்தனர். போடிமெட்டு மலைச்சாலையில் 10 ஆவது கொண்டை ஊசி  வளைவு அருகே கார் சென்றபோது, காரின் முன் பகுதியிலி ருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து காரில் சென்ற 3 பேரும் கீழே இறங்கிவிட்டனர். இந்த நிலையில், கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்பகுதியில் தண்ணீர் வசதி இல்லாத தால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். இருந்த போதிலும் கார் முழுவதும் எரிந்து நாசமடைந்தது. இது குறித்து போடி குரங்கணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் விவசாயிகளுக்கு  வறட்சி நிவாரணம் வழங்கிடுக! 

இராமநாதபுரம், செப்.9- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டக் குழு கூட்டம் எம்.முத்து ராமு தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், 2022 ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு அறி வித்துள்ள விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத் தொகையை  இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு உடனடி யாக வழங்க வேண்டும், விவசாயிகளிடம் அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு மேலும் காலதாமதப்படுத்தாமல் உடனடி யாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 2022-23 ஆம்  ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க  மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவர் மீது போக்சோ

காரியாபட்டி, செப்.9- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த 10  வயது சிறுமியை தனது தாயார், அருகில் உள்ள ரவி என்பவர்  கடைக்கு போகச் சொல்லியுள்ளார். ஆனால், சிறுமி கடைக்கு  செல்ல மறுத்துள்ளார். ஏன், எனக் கேட்டபோது, தனக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்தார் என அச்சிறுமி கூறியுள்ளார்.  இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் அருப்புக் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காரியாபட்டியைச் சேர்ந்த ரவி என்ப வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

பாஜக- இதரக் கட்சிகளிலிருந்து விலகி  200 பேர் சிபிஎம்மில் இணைந்தனர்

இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா தீயனூர் ஊராட்சி வெற்றிநகரில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 200 பேர் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந் தனர்.  தீயனூர் ஊராட்சியில் காணிக்கர் பழங்குடி பிரிவைச் சேர்ந்த 300 பேருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை யீட்டால் பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர மார்க்  சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்து போராடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாஜக உள் ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, தங்க ளுக்காக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைவது என முடி வெடுத்து 200 ஆண்களும், பெண்களும் தங்களை கட்சியில் இணைத்து கொண்ட னர்.  இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் பரமக்குடி தாலுகா செயலாளர் தி.இராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.காசி நாததுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் வி.மயில்வாகணன், மாவட்டக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, தாலுகா குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.முரளி, ராமச் சந்திரன், முனியசாமி ஆகியோர் பங் கேற்றனர்.