திண்டுக்கல், நவ.21- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தமிழ் நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பாக சிறப்பு பயிற்சி முகாம் நடை பெற்றது. இம்முகாமிற்கு மாவட்டத்தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். மலைச் சாமி வரவேற்று பேசினார். ஆறுமுகவள்ளி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாநி லக்குழு உறுப்பினர் சிவக் குமார், மாவட்ட பொருளா ளர் காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி, மாநில தலை வர் வில்சன், பாரதி அண்ணா, பகத்சிங் ஆகியோர் பேசி னர். டி.ராமசாமி நன்றி கூறி னார். விருதுநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் அரங்கத்தின ருக்கான பயிற்சி முகாம் விருதுநகரில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்டக் குழு உறுப்பினர் பி.அன்புச் செல்வன் தலைமையேற் றார். துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.சுந்தரபாண்டியன் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் பா.ஜான்சி ராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ் ஆகியோர் கருத்துரையாற் றினர். முடிவில் மாற்றுத் திற னாளிகள் சங்க மாவட்டத் தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.