மயிலாடுதுறை, மார்ச் 30 - மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி அருகே யுள்ள திருக்களாச்சேரி கலை மகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வரு முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கார்த்திக் சந்திரகுமார் தலை மையில் புதனன்று நடை பெற்றது. திருக்களாச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சம்சாத் ரபிக் வரவேற்று பேசி னார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பூம்பு கார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றி னார். இம்முகாமில் சிறப்பு மருத்துவ அலுவலர்கள் வந்து ஸ்கேன், இசிஜி, பொது மருத்துவம், மகளிர், குழந்தைகள், எலும்பு முறிவு, காது-மூக்கு-தொண்டை, கண் பிரிவு, பல் பிரிவு, இயன்முறை, சிகிச்சை பிரிவு, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, நியூட்ரிசன் மற்றும் ரத்த பரிசோதனை உட்பட வட்டார பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பரிசோ தனை மற்றும் மருத்துவம் பார்க்கப்பட்டது. அங்கன் வாடி சார்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு தானியங்கள் விளக்க படங் கள் மற்றும் பொருட்காட்சி வைக்கப்பட்டிருந்தது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய் யும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இறுதியாக வட்டார மருத்துவ மேற்பார் வையாளர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.