அரியலூர், ஆக.21- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பாலி கிளினிக்கை ஜெயங் கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த பாலி கிளினிக்கில் திங்கள்கிழமை பொது மருத்துவமும், செவ்வாய்க்கிழமை மகப்பேறு மருத்துவமும், புதன்கிழமை குழந்தை நல மருத்துவமும், வியாழக் கிழமை கண் மருத்துவமும், வெள்ளிக் கிழமை பல் மருத்துவமும், சனிக்கிழமை மன நல மருத்துவமும் என மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை பார்க்கப்ப டும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட சுகாதார துணை இயக்குநர் மரு.கீதாராணி தெரிவித்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் மேக நாதன், நகர்மன்ற தலைவர் சுமதி சிவக் குமார், அனைத்து மருத்துவர்களும், மாநில திமுக சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாவட்ட துணை செய லாளர் கணேசன் மற்றும் நகர்மன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.