districts

மாணவர்கள் கல்விக்கடன் பெற ஜூன் 12 இல் சிறப்பு முகாம்

இராமநாதபுரம், மே 31- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெறும் வகையில் ஜூன் 12 ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என்று கே. நாவஸ்கனி எம்.பி., தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் புதன்கிழமையன்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் மாபெரும் வங்கி கல்விக்கடன் பெறும் வகையில் சிறப்பு  முகாம் ஜூன் 12 இல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறுகிறது. இந்த மாபெரும் வங்கிக் கடன் முகாமில் தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்ட 17 வங்கிகள் பங்கேற்கின்றன. இது  தொடர்பான விபரங்களுக்கு இராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் அலுவலகத்தை மாணவர்கள் அணுகி  விபரங்களை கேட்டு அறியலாம்.  பொருளாதாரச் சூழல் காரணமாக உயர்கல்வி யை தொடர முடியாத மாணவர்கள் உரிய ஆவணங்களு டன் பங்கேற்று கல்வி கடன் பெற்று பயன்பெறலாம். ஏற்க னவே இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 700 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உயர் கல்விக்கான உதவி சொந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;