districts

img

நெல்லையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடக்கம்

திருநெல்வேலி, செப். 24- தமிழ்நாட்டின் தற்போதைய பசுமை பரப்பினை 28.8 சதவீதத்தி லிருந்து 33 சதவீதமாக உயர்த்திட முடிவு செய்து பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படும் என கடந்த நிதிநிலை அறிக்கையின் போது நிதித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை உலக ஆறுகள் தினம் அனுசரிக்கப்படுவதை தொ டர்ந்து நெல்லை மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடக்க நிகழ்வு நெல்லை சந்திப்பு தாமிரபரணி நதிக்கரை யில் தைப்பூச மண்டபம் அருகே மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலை மையில் நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பசுமை தமிழ்நாடு இயக் கத்தை தொடங்கி வைத்தார்.மேலும் தாமிரபரணி நதிக்கரை யை சுத்தப்படுத்தும் பணியையும் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:- தமிழகத்தில் பசுமை பரப் பினை அதிகரிக்கும் நோக்கில்  தமிழக முதல்வர் தொலைநோக்கு பார்வையோடு கொண்டு வந்துள்ள பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டம் நெல்லையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் இன்று தாமிர பரணி நதிக்கரையில் மரக்கன்று கள் நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் நெல்லை மாவட்ட நிர்வா கம் மற்றும் வனத்துறை சார்பில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 14 லட்சம் மரக் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்ய மாவட்ட நீர்வளம் மற்றும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் பணிகள் அனைத்தும் பசுமைக் குழுவினால் கண்காணிக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி முருகன் மற்றும் கல்லூரி மாணவிகள், நெல்லை நீர்வள அமைப்பினர், இயற்கை ஆர்வலர் கள், ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.