தூத்துக்குடி, அக்.17- தூத்துக்குடியில் மாநில அளவில் யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்ற முதல் நிலை காவலருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இண்டெர்நேஷ னல் யூனியன் யோகா கூட்டமைப்பு மற்றும் சைன் யோகா பவர் அமைப்பு சார்பாக பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப் பிரிவினருக்கு மாநில அளவிலான யோகா போட்டி நடை பெற்றது. இந்த யோகா போட்டியில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர். இதில் பொதுப்பிரிவினருக்கான யோகா போட்டியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை முதல் நிலை காவலர் ராஜலிங்கம் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். அவரை திங்களன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டி மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார்.