districts

ரயில் கட்டணத்தை குறைத்திடுக! இராமேஸ்வரத்திலிருந்து குமரி, பாலக்காடு, கோவைக்கு தினசரி ரயில் இயக்கிடுக!

இராமநாதபுரம், மே 18-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வி. காசிநாததுரை, தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  மதுரை - இராமேஸ்வரம் வண்டி எண் : 06651, மறுமார்க்கத்தில் இராமேஸ்வரம் - மதுரை வண்டி எண் : 06652 முன்பதிவில் லாத விரைவு சிறப்பு ரயில் மே 30 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்ற செய்தி மகிழ்ச்சி. கடந்த மே 15 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ரயில் மறியலையொட்டி, ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில் மே 14 பேச்சுவார்த்தையில், பொது மேலாளர்  (சென்னை) மூலம் ஒரு மாத காலத்தில்  கோரிக்கை நிறைவேற்ற ஆவன செய்வ தாக மதுரை அலுவலக e அதிகாரிகளு டன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன டிப்படையில் மேற்கண்ட ரயிலை துரிதமாக ஏற்பாடு செய்த உங்களுக்கும், மதுரை கோட்ட மேலாளருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக்  குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.  கொரோனாவுக்கு முன்பு பயணிகள் ரயில் டிக்கெட் பரமக்குடி முதல் மதுரைக்கு ரூ.20 ஆக இருந்தது. தற்போது எக்ஸ் பிரஸ் ஸ்பெஷல் என்ற பெயரில் டிக்கெட் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இதுபோன்று காலை 5.45 மணிக்கு இராமேஸ்வரம் புறப்பட்டு மதுரை சென்ற டையும் ரயில் கட்டணம் 100 சதவீதம் உயர்வு.  இராமநாதபுரம் மாவட்டம் தொழில் துறை இல்லாத, வானம் பார்த்த பூமியாக விவசாயிகள் வாழ்க்கை உள்ளதை தாங்கள் அறிவீர்கள். இத்தகைய சூழலில் எக்ஸ்பிரஸ் என்ற பெயரை மாற்றி பயணி கள் ரயில் என இயக்குவதன் மூலம் பய ணிகள் கட்டணம் குறையும். பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவும். இந்த கோரிக்கையை அவசியம் ஏற்க வேண்டு கிறோம்.  (பரமக்குடி - மதுரை தனியார் பேருந்து  கட்டணம் ரூ.50 என்பதை தங்களது கவ னத்திற்கு கொண்டு வருகிறேன்). மேலும், திருச்சி - இராமேஸ்வரம் பயணி கள் ரயில், தற்சமயம் எக்ஸ்பிரஸ் ரயிலாக பயணிக்கிறது. இதையும் பயணிகள் ரயில் என அறிவித்து, பயணிகள் ரயிலுக்கான கட்டணத்தை நிச்சயிக்க வேண்டும்.   இராமநாதபுரம் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை தங்களது கவனத்திற்கு மீண்டும் கொண்டு வருகிறோம். கன்னியா குமரி - இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கிட வேண்டும். கோவை - இராமேஸ்வரம் தினசரி ரயில் இயக்கிட வேண்டும். பாலக்காடு - இராமேஸ்வரம் தினசரி ரயில் இயக்கிட ஆவன செய்ய வேண்டும். இராமேஸ்வரம் மக்கள் பொரு ளாதார வாழ்வு மேம்பட சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி ரயில் நிலையங்களிலி ருந்து அந்தியோதயா ரயில் இயக்கு வதற்கு ஆவன செய்ய வேண்டும். வட மாநிலங்களில் இருந்து இராமேஸ்வரம் வந்து செல்லும் அஜ்மீர், அயோத்தியா, செகந்திராபாத் ஆகிய ரயில்கள் இராம நாதபுரம் இரயில் நிலையத்தில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்ல நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.