தேனி, மே 18- தேனி மாவட்டத்தில் கஞ்சாவை பொறுத்தவரை இந்த ஆண்டு 56 வழக்கு களில் மொத்தம் 139 பேர் கைது செய்யப் பட்டு, இவர்களிடம் இருந்து 1350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 22பேர் குண்டர் தடுப்புச் சட்டத் தில் கைது செய்யப்பட்டதாக தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தெரி வித்துள்ளார். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் தென்மண்டல போலீஸ் ஐஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.திண்டுக்கல் சரக டிஐஜி அபினவ் குமார், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ்டோங்கரே ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ஐஜி. அஸ்ரா கார்க் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு நீதி மன்ற விசாரணையில் இருந்த 4 கொலை வழக்குகள், 3 போக்சோ வழக்குகள், 9 வழிப்பறி வழக்குகள் என மொத்தம் 16 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண் டனை கிடைத்துள்ளது. குறிப்பாக கொலை வழக்குகளில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டுள்ளது. ஆண்டிபட்டி போக்சோ வழக் கில் ஒருவருக்கு 25 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கண்டமனூர் காவல்நிலையத்தில் பதிவு செய்த போக்சோ வழக்கில் 3 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை யும், 2 பேருக்கு 10 ஆண்டுகள் தண்டனை யும் விதிக்கப்பட்டுள்ளது. ராயப்பன்பட்டி போக்சோ வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு கள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. கஞ்சாவை பொறுத்தவரை இந்த ஆண்டு 56 வழக்குகளில் மொத்தம் 139 பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடம் இருந்து 1350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இதில் 22 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கஞ்சா வழக்கில் 379 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறார்கள் .தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு 16 கொலை கள் நடந்துள்ளன. இந்த கொலைகள் குழு வாகவோ, பழிவாங்கும் நோக்கிலோ நடக்க வில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.