districts

img

பணிநிறைவு பாராட்டுவிழா

மதுரை, ஏப்.2-  தென்மண்டல எல்ஐசி  மகளிர் ஒருங்கிணைப் புக்குழு இணை அமைப்பா ளர், மதுரை கோட்ட காப்  பீட்டுக்கழக ஊழியர் சங் கத்தின் துணைத் தலைவர் என 20 ஆண்டுகளுக்கு மேலாக சங்கப் பணியாற்றி யவர். மதுரை கோட்ட அலு வலகத்தில் 33 ஆண்டுகளும் எல்ஐசி வீட்டு வசதி நிறு வனத்தில் நான்கு ஆண்டு களும் என 37 ஆண்டு கால மாக அலுவலகப் பணியாற்றி யவர் என மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த  ஜெ. விஜயா  அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய இன்சசூரன்ஸ் ஊழி யர் சங்க மதுரை கோட்ட  தலைவர் நா. சுரேஷ்குமார்  தலைமை வகித்தார். இன்சு ரன்ஸ் ஊழியர் சங்க இணைச் செயலாளர் எம்.கிரிஜா, தென்மண்டல முன்னாள் பொதுச்செயலாளர் க . சுவாமிநாதன்,  இன்சூரன்ஸ் பென்ஷனர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் சி . சந்திரசேகரன், தென் மண்டல உழைக்கும் மகளிர்  ஒருங்கிணைப்பு குழு என் .  கண்ணம்மா, ஆர்.எஸ் .செண்பகம், மதுரை மண் டல பொது இன்சூரன் ஊழி யர் சங்க துணைத் தலைவர் வி.ரமேஷ், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென்மண்டல  பொதுச் செயலாளர் டி .  செந்தில்குமார், மதுரை மண்  டல பொதுச் செயலாளர்  என்.பி. ரமேஷ்கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செய லாளர் மா. கணேசன் மற்றும் தோழமைச்சங்க நிர்வாகி கள் பாராட்டிப் பேசினர். ஜெ. விஜயா ஏற்புரையாற்றினார், இணைச்செயலாளர் எஸ் . நாகராஜன் நன்றி கூறினார். விஜயா அவர்களின் இணை யர் பேராசிரியர் முரளி மற் றும் பலர் பங்கேற்றனர்.