சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் வேலாயுதராஜா “உன்னையே நீ அறிவாய்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். பள்ளித் தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களைப் பின்னுட்டமாக வழங்கிய மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.