முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மாங்குளம் ஊராட்சியில் உள்ள அலங்கார குளத்தில் மரக்கன்று நடும் விழா ஊராட்சி மன்றத் தலைவர் முருகவள்ளி தேசிங்குராஜா தலைமையில் நடந்தது. இவ்விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். மேலும் 200 குடும்பங்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இளையான்குடி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மதியரசன், வனத்துறை அதிகாரி பிரபா,வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபரமேஷ்வரி, மானாமதுரை நகர் மன்ற உறுப்பினர் இந்துமதி,வேளாண் உற்பத்தி குழு மாவட்ட உறுப்பினர் சோணைமுத்து, திமுக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட ஒன்றிய செயலாளர் காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.